நிழல்கள் – நகுலன்

நகுலனே இந்த கதையின் மைய்யப் புள்ளியை பற்றி இப்படி சொல்கிறார் - "இந்தியன் என்ற வகையில் ஒரு மையத்தை நினைவு கூர்கையில் மற்ற எல்லா மையங்களும் வெறும் நிழல்கள் தான்". மிகச் சிறிய நாவல் இது. சாரதி என்ற கதையின் நாயகன், அவனின் வாழ்கை அனுபவத்தை பகிரும் வகையில் கதையை அமைத்திருக்கிறார் நகுலன்.

கோபல்ல கிராமம் – கி.ரா.

ஆகா...அருமை என்று சொல்வதை விட வேறொன்றும் தெரியவில்லை. யுவன் சந்திரசேகர் முன்னுரையில் சொன்னது போல, ஒரு கதை / நாவல் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையை உடைத்தெறிந்து, சம்பவங்களின் கோர்வையாக மிக லாவகமாக கொடுத்திருக்கிறார் கீ.ரா. சர்வ சாதரணமாக, நகைச்சுவை இழையோட கதை நெடுக மாந்தர்களை நடமாட விட்டிருக்கிறார் - உதாரணமாக, அக்கையா செய்யும் குறும்புகள், பெரிய நாயக்கர் வெத்தலை பாக்கு போடும் லாவகம், பறவை ரெக்கையால் காத்து குடைவதை பற்றி வர்ணிப்பது என்று … Continue reading கோபல்ல கிராமம் – கி.ரா.